“தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”-மலேசியத் தமிழர் சங்கம் அறிவிப்பு
தமிழர் இனம் என்பது தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள். இவர்களில் பலர் இந்துக்களாகவும், சிலர் இஸ்லாம், கிருஸ்துவ சமயத்தையும், பௌத்தம் சமய நம்பிக்கை கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் தமிழ் பண்பாடு உள்ளது. அது மண் சார்ந்த தன்மையுடயது என்பதை மறுக்க முடியாத உண்மை.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல்வார்(குறள்1033) என்ற திருவாய் மொழிக்கேற்பஉழவுத் தொழிலைச் சார்ந்து தங்கள் வாழ்வியலை அமைத்துக் கொண்ட இந்த தொன்மையான இனம், ஆதவனை வணங்கி, அவனுக்கு உறுதுணையாக இருந்த…
