உலகிலேயே தனி மகத்துவம் கொண்ட இனம் நம்முடைய தமிழ் இனம். தமிழினத்தின் உயர்வான வாழ்விற்கு வித்தாக விளங்கிய தமிழ் மொழியின் சிறப்பை உலகத்தமிழர்கள் அறிய வேண்டும், உணர வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையோடு இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசியத் தமிழர் சங்கம், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை
ஆகியவை இணைந்து, தமிழக்கு மற்றுமொரு மகுடக்கல்லாய் நிலைத்திருக்க வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்திற்காக இம்மாநாட்டினை நடத்துகின்றோம்.
‘வாழ்வியல் மேம்பாட்டிற்குத் தமிழின் கொடை’
மொழியின் தொன்மை, கலை கலாச்சார செம்மை, சமய மாட்சிமை, பண்பாட்டுப் பெருமை, அறிவியல் ஆளுமை, வர்த்தகத் தொழில்நுட்ப வளமை போன்ற பல்வேறு பொருண்மைகளில் படைக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் முறைப்படுத்தப்பட்டு இரு மொழிகளில் (தமிழ் ஆங்கிலம்) நூலாகப் பதிப்பிக்கப்பட்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். உலகெங்கிலும் உள்ள அனைத்துத் தமிழர்களும் இம்மாநாட்டில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று விழைகிறோம். உலகெங்கிலும் உள்ள தமிழரும் தமிழும் சிறப்பெய்திட நல்லதொரு நிகழ்வாக இம்மாநாடு அமைய வேண்டும்.
என்று தமிழன்னையை வணங்கி
உங்களுக்கு மகிழ்வோடு அறிவிக்கின்றோம்.
மேலும் விபரம் பெற்றிட இம்மாநாட்டுச்
செயலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.